2024 ஜனவரி முதல் நவம்பர் வரை பதினொரு மாதங்கள் தனது தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் தன்னை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 14 வயது சிறுமி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
முலுண்ட் போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரை ஜூலை 28 வரை நீதிமன்றம் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. தந்தை குடிகாரர் என்றும் அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மைனர் என்பதால் சிறார் மையத்திற்கு அனுப்பப்பட்டார்.
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் குறித்து சிறார் இல்லத் தலைவரிடம் தெரிவித்ததை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

0 #type=(blogger):