புது தில்லி: தீபாவளி மற்றும் சத் பூஜை கொண்டாட்டங்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, பல்வேறு ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நிலையங்கள் உட்பட நாட்டின் 15 முக்கிய நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 28 வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளுக்கான கட்டுப்பாடு தொடரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கிடையில், உதவி தேவைப்படும் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் மற்றும் பெண் பயணிகளுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.
பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட நிலையங்கள்:
புது தில்லி ரயில் நிலையம்
டெல்லி ரயில் நிலையம்
ஹஸ்ரத் நிஜாமுதீன்
ஆனந்த் விஹார் முனையம்
காஜியாபாத்
பாந்த்ரா முனையம்
வாபி
சூரத்
உத்னா
சத்ரபதி சிவாஜி மகாராஜா முனையம் (CSMT)
தாதர்
லோக்மான்ய திலக் முனையம் (LTT)
தானே
கல்யாண்
பன்வேல்

0 #type=(blogger):