வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் மட்டும் பணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, FASTag இல்லாமல் ரொக்கமாகப் பணம் செலுத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 2 மடங்கு வசூலிக்கப்படுகிறது. UPI மூலம் செலுத்தினால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 1.25 மடங்கு வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் ரொக்கப் பரிமாற்றமே இருக்காது என்பதால், வாகன ஓட்டிகள் அனைவரும் FASTag அல்லது UPI முறைக்கு மாற வேண்டியது கட்டாயமாகும் என்று கூறப்படுகிறது.

0 #type=(blogger):