Thursday, February 26, 2026

பணி நியமன முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி மனு!

பணி நியமன முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி மனு!

 


நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக எம்.பி ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

Monday, February 23, 2026

“ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் சரி பாதி பெண்களுக்கு வழங்கப்படும்” – தவெக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்

“ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் சரி பாதி பெண்களுக்கு வழங்கப்படும்” – தவெக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்

 


வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “அதிகாரிகளில் சரி பாதி பெண்கள்” உள்ளிட்ட தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தனது பாணியில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி தனது பேச்சை தொடங்கினார்.


அவர் சொன்ன குட்டி ஸ்டோரி, “ஆள் நடமாட்டம் அதிகமுள்ள 4 சாலை சந்திப்பில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை நிற்கிறது. அதன் அருகில் யாரும் போக முடியவில்லை. அந்த காளையை அடக்கினால் தான் அந்த இடம் இயல்புக்கு திரும்பும். அந்த காளையை அடக்க நினைத்த ஒரு சிலர், "எங்களுக்கு இல்லாத அனுபவமா?" என அடக்க முயன்றனர். யாராலும் தொட முடியவில்லை.


ஒரு சின்ன பையன் வருகிறான். அந்த பையனையும் கிண்டல் செய்கிறார்கள். அந்த சிறுவனை ஏளனம் செய்தனர். இன்னொரு புறம் பரிதாபப்பட்டனர். சின்ன பையன் எதையும் கேட்காமல் தில்லாக காளையை நோக்கி சென்றான். அந்த பையன் முன்னால் சென்று மறைத்து வைத்திருந்த புல்லு கட்டை கொடுத்து காளையை அடக்கி கூட்டி வந்தான். அடிபட்டு கிடந்த அனுபவசாலிகள் தலையை தொங்கப் போட்டனர்” என குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், தொடர்ந்து தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்.

Saturday, February 21, 2026

நாம் தமிழர் கட்சி மாநாடு.. 234 தொகுதிகளிலும் பட்டப்படிப்பு முடித்த வேட்பாளர்கள்.. பட்டியல் தயார்!

நாம் தமிழர் கட்சி மாநாடு.. 234 தொகுதிகளிலும் பட்டப்படிப்பு முடித்த வேட்பாளர்கள்.. பட்டியல் தயார்!



 திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் இன்று மாலை நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநாட்டிற்கான இறுதிகட்ட ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் சீமான் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில், 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக அமர்வதற்கு இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிநாட்டில் இருந்து வரக்கூடியவர்களுக்கு என தனித்தனி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் வரும் அதிரடி மாற்றம்.. என்ன தெரியுமா?

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் வரும் அதிரடி மாற்றம்.. என்ன தெரியுமா?

 


வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் மட்டும் பணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, FASTag இல்லாமல் ரொக்கமாகப் பணம் செலுத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 2 மடங்கு வசூலிக்கப்படுகிறது. UPI மூலம் செலுத்தினால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 1.25 மடங்கு வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் ரொக்கப் பரிமாற்றமே இருக்காது என்பதால், வாகன ஓட்டிகள் அனைவரும் FASTag அல்லது UPI முறைக்கு மாற வேண்டியது கட்டாயமாகும் என்று கூறப்படுகிறது.

Monday, February 16, 2026

மகா சிவராத்திரி: ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்...

மகா சிவராத்திரி: ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்...

 


மகா சிவராத்திரியையொட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். கடற்கரை மணலில் சிவலிங்கம் பிடித்து வழிபட்டனர். பலரும் எள்ளுப் பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வடமாநில பக்தர்கள் மற்றும் அகோரிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்திருந்ததால், அக்னிதீர்த்த கடற்கரையில் கூட்ட நெரிசல் அதிகரித்தது.


மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி இன்று திரளான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் புனித நீராடி கடற்கரை மணலில் சிவலிங்கம் பிடித்து வழிபாடு செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி மற்றும் ஆடி திருக்கல்யாண விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8ஆம் தேதி, ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் மீன லக்னத்தில் சிவச்சாரியார்கள் வேத முழங்க கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.